sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நல்லாறு இயக்கத்தினர் அமைச்சரிடம் மனு

/

நல்லாறு இயக்கத்தினர் அமைச்சரிடம் மனு

நல்லாறு இயக்கத்தினர் அமைச்சரிடம் மனு

நல்லாறு இயக்கத்தினர் அமைச்சரிடம் மனு


ADDED : நவ 05, 2025 12:16 AM

Google News

ADDED : நவ 05, 2025 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: நல்லாறு பாதுகாப்பு இயக்கம் சார்பில், அமைச்சர், கலெக்டர் உள்ளிட்டோரிடம் மனு அளிக்கப்பட்டது.

அவிநாசி, திருமுருகன்பூண்டி மற்றும் திருப்பூர் பகுதியில் அமைந்துள்ள நல்லாறு சமீபகாலமாக அதன் தன்மையை இழந்து மறைந்து போகும் அபாயத்தில் உள்ளது. இந்நிலையில் ஆற்றை மீட்டெடுத்து மீண்டும் அதை நல்ல முறையில் பாதுகாத்து, வளம் பெறச் செய்யும் வகையில், சமீபத்தில் இயற்கை ஆர்வலர்கள் சிலர் ஒன்றிணைந்தனர். திருமுருகன்பூண்டியை மையமாகக் கொண்டு இதற்காக, நல்லாறு பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு துவங்கப்பட்டது.

அவ்வமைப்பு சார்பில் நேற்று திருப்பூரில் அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் மணிஷ் நாரணவரே ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நல்லாறு முற்றிலும் ஆக்கிரமிப்பு அகற்றி துார் வார வேண்டும்; ஆற்றினுள் கழிவு நீர் கலக்காமல் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us