ADDED : அக் 19, 2025 10:49 PM

திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், 25 லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்கை விரைவில் தொடப்போகிறது. தற்போது செயல்படுத்தி வரும், 11வது திட்டத்தில், வெள்ளகோவில், தாராபுரம், உடுமலை, திருப்பூர், பல்லடம் மற்றும் அவிநாசி சுற்றுப்பகுதிகளில் மரக்கன்று நடும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பருவமழையை பயன்படுத்தி, மரக்கன்று நட்டு முடிக்க திட்டக்குழுவினர் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில், வெள்ளகோவில் அடுத்த மொஞ்சனுார் கிராமம் வைரமடை பகுதியில், 1,000 வேம்பு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.மகுடபதி, முத்துமேகலா ஆகியோருக்கு சொந்தமான எட்டு ஏக்கர் நிலத்தில், 1,000 வேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகளை வைத்து, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, துாப தீபத்துடன் இயற்கையை வழிபட்டு, மரக்கன்று நடும் பணி துவக்கி வைக்கப்பட்டது.
'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.