/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒழுக்கத்துடனான கல்வி: புதிய சி.இ.ஓ. உறுதி
/
ஒழுக்கத்துடனான கல்வி: புதிய சி.இ.ஓ. உறுதி
ADDED : நவ 07, 2025 09:39 PM
உடுமலை: 'ஒவ்வொரு பள்ளியிலும் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி கற்றுத்தரப்படும். கல்வியாண்டில் சிறந்த இடத்தை திருப்பூர் கல்வி மாவட்டம் பெற அனைத்து முயற்சிகளும் உத்வேகத்துடன் மேற்கொள்ளப்படும்,' என, முதன்மை கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள் தெரிவித்தார்.
கோவை மாவட்ட கல்வி அலுவலராக இருந்த புனித அந்தோணியம்மாள், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டார்.
நேற்று முன்தினம் இரவு அறிவிப்பு வந்த நிலையில், புதிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக அந்தோணியம்மாள், நியமிக்கப்பட்டதையடுத்து, திருப்பூர் கலெக்டர் அலுவலக ஐந்தாவது தளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மாவட்ட கல்வி அலுவலர் காளிமுத்து மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், ''ஒவ்வொரு பள்ளியிலும் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி கற்றுத்தர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். பொதுத்தேர்வில் கூடுதல் தேர்ச்சி சதவீதம் எட்டுவதற்கான பணிகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் தரப்படும். நடப்பு கல்வியாண்டில் சிறந்த இடத்தை திருப்பூர் கல்வி மாவட்டம் பெறும்; அதற்கான அனைத்து முன்னெடுப்புகளும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடனும், உத்வேகத்துடனும் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

