sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை வசமாக்க  புதிய முதலீட்டு மானிய திட்டம் அவசியம்

/

சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை வசமாக்க  புதிய முதலீட்டு மானிய திட்டம் அவசியம்

சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை வசமாக்க  புதிய முதலீட்டு மானிய திட்டம் அவசியம்

சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை வசமாக்க  புதிய முதலீட்டு மானிய திட்டம் அவசியம்


ADDED : மே 20, 2025 11:52 PM

Google News

ADDED : மே 20, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; இந்திய பொருளாதார வளர்ச்சியில், ஜவுளி ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது. நம் நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில், அமெரிக்கா, 39 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகள், 29 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்திலும், 9 சதவீத பங்களிப்புடன் பிரிட்டன் நான்காம் இடத்திலும், 8 சதவீத பங்களிப்புடன், ஐக்கிய அரபு நாடுகள் நான்காவது இடத்திலும் உள்ளன.

மிகவும் எதிர்பார்த்திருந்த, பிரிட்டன் விரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள், ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. வரும் ஜூலை 8 ம் தேதிக்குள், அமெரிக்காவுடன், குறைந்தபட்ச வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவும் முயற்சி நடந்து வருகிறது. வர்த்தக ஒப்பந்தங்கள் உருவாகும் போது, தற்போதைய ஆயத்த ஆடை ஏற்றுமதி, சில ஆண்டுகளில் இரட்டிப்பாக உயரும் என்பது, பொருளாதார நிபுணர்களின் கணிப்பு.

இருப்பினும், புதிய வாய்ப்புகளை முறையாக பயன்படுத்த, கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதும் மிக அவசியம். பின்னலாடை தொழிலில் சாதகமான சூழல் நிலவுவதால், புதிய நிறுவனங்களை துவக்குவதற்கான முதலீட்டு மானியம் வழங்கும் திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். குறிப்பாக, நீண்ட நாள் பேச்சளவில் இருக்கும், பி.எல்.ஐ., எனப்படும், உற்பத்தி சார் மானிய திட்டத்தை, மத்திய அரசு அதிக கெடுபிடியில்லாமல் செயல்படுத்த முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிறப்பு சலுகை வேண்டும்

ஜவுளித்துறை, கடந்த 10 ஆண்டுகளாக புதிய தொழில்நுட்பம் அமலாகவில்லை; புதிய தொழில்நுட்ப மறுமலர்ச்சி திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். அதிக ஆர்டர்கள் வருவதால், உற்பத்தி திறனை மேம்படுத்த வேண்டும். சர்வதேச அளவில் ஒப்பிடுகையில், இந்தியாவின் உற்பத்தி திறன், 45 முதல், 50 சதவீதம் வரை மட்டுமே உள்ளது. அதனை, 70 சதவீதமாக உயர்த்த வேண்டும். புதிய முதலீடு செய்து, வியட்நாம், வங்கதேசத்தில் இருப்பது போல், 2,500 மெஷின்களை கொண்ட பெரிய நிறுவனங்கள் துவங்கப்பட வேண்டும். அதற்காக, புதிய முதலீட்டு மானியம், வட்டி மானிய திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். உற்பத்தி பிரிவில், 'ஏஐ' தொழில்நுட்ப இயந்திரங்கள் நிறுவ சிறப்பு சலுகை வழங்க வேண்டும். - சுப்பிரமணியன்திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர்








      Dinamalar
      Follow us