ADDED : டிச 16, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார் அடுத்த கள்ளிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வலையபாளையம், துத்தாரி பாளையம் ஆகிய இடங்களில் வாரச்சந்தை நடைபெறுகிறது.
சந்தையில் பேரம் பேசி விலை மலிவாக பொருட்களை வாங்க முடியும் என்பதால் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து ஆதரவு கிடைத்து வருகிறது. கள்ளிப்பாளையத்தில் நேற்று புதிதாக வாரச்சந்தை துவக்கி வைக்கப்பட்டது. ஊராட்சித் தலைவர் சாந்தினி துவக்கி வைத்தார். ஏராளமானோர் பொருட்களை வாங்கிச் சென்றனர்.