sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

2025 புத்தாண்டு பிறந்தது; பொதுமக்கள் உற்சாகம்

/

2025 புத்தாண்டு பிறந்தது; பொதுமக்கள் உற்சாகம்

2025 புத்தாண்டு பிறந்தது; பொதுமக்கள் உற்சாகம்

2025 புத்தாண்டு பிறந்தது; பொதுமக்கள் உற்சாகம்


ADDED : ஜன 02, 2025 06:08 AM

Google News

ADDED : ஜன 02, 2025 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; ஆங்கிலப் புத்தாண்டான, 2025ம் ஆண்டை வரவேற்க, நேற்று முன்தினம் இரவு மக்கள் தயாராகினர். புதிய ஆண்டு நலமும், வளமும் நிறைந்த ஆண்டாக இருக்க வேண்டும் என்ற நேர்மறை எண்ணத்துடன், மக்கள் புத்தாண்டை எதிர்கொண்டனர்.

பொதுமக்கள் பலர், தங்கள் வீடுகளிலும், பல்வேறு இடங்களில் குடியிருப்போர் நலச்சங்கங்கள், தாங்கள் சார்ந்த வீதி, தெருக்களிலும், கேக் வெட்டி, பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்றனர். திருப்பூரில் உள்ள ஓட்டல், ரிசார்ட்டகளில் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; சிறப்பு இரவு உணவு, இசை உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வழிபாட்டு தலங்கள்


கிறிஸ்தவ தேவாலயங்களில், புத்தாண்டை வரவேற்கும் விதமாக, நள்ளிரவு, 12:00 மணிக்கு சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடத்தப்பட்டது. இத்திருப்பலியில், 'கடந்தாண்டு முழுக்க இறைவன் செய்த நன்மைக்கு நன்றி சொல்லும் விதமாகவும், வரும், புத்தாண்டில் அனைத்து வளங்களும் கிடைக்க வேண்டும்' என்ற வேண்டுதல் முன்வைக்கப்பட்டது. புத்தாண்டையொட்டி, தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் ஜொலித்தன.






      Dinamalar
      Follow us