sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இடுவாயில் குப்பை கூடாது: பல்லடம் எம்.எல்.ஏ. மனு

/

இடுவாயில் குப்பை கூடாது: பல்லடம் எம்.எல்.ஏ. மனு

இடுவாயில் குப்பை கூடாது: பல்லடம் எம்.எல்.ஏ. மனு

இடுவாயில் குப்பை கூடாது: பல்லடம் எம்.எல்.ஏ. மனு


ADDED : நவ 06, 2025 04:39 AM

Google News

ADDED : நவ 06, 2025 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: இடுவாய் ஊராட்சியில், மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்று, பல்லடம் எம்.எல்.ஏ., ஆனந்தன் மனு கொடுத்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அவர் அளித்த மனு:

பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட இடுவாய் ஊராட்சி, சின்னக்காளிபாளையத்தில் உள்ள, திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், மாநகராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இடுவாய் மற்றும் சுற்றியுள்ள, 5 ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் காத்திருப்பு போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இங்கே குப்பை கொட்டப்படுவதால், விவசாய நிலங்கள் மாசுபடுவதுடன், சுற்று வட்டாரத்தில் கடுமையான துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.

போராட்டம் நடத்தும் பொது மக்களின் கருத்தினை மாநகராட்சி நிர்வாகம் கேட்டு உரிய தீர்வை எடுக்க வேண்டும். இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, குப்பை கொட்டுவதை நிறுத்தி வைக்க ஆவணம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us