sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வணிக கட்டட வாடகை ஜி.எஸ்.டி., கிடையாது; வணிகர்கள், தொழில்துறையினர் நிம்மதி

/

வணிக கட்டட வாடகை ஜி.எஸ்.டி., கிடையாது; வணிகர்கள், தொழில்துறையினர் நிம்மதி

வணிக கட்டட வாடகை ஜி.எஸ்.டி., கிடையாது; வணிகர்கள், தொழில்துறையினர் நிம்மதி

வணிக கட்டட வாடகை ஜி.எஸ்.டி., கிடையாது; வணிகர்கள், தொழில்துறையினர் நிம்மதி


ADDED : டிச 24, 2024 07:38 AM

Google News

ADDED : டிச 24, 2024 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; வணிக கட்டட வாடகையில், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிப்பதில் இருந்து விலக்கு அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளதால் தொழில்துறையினர், வணிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

வருவாயை பெருக்கும் நோக்கில், வணிக கட்டட வாடகையில், 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கலாம் என ஜி.எஸ்.டி., மத்திய சீராய்வு குழு பரிந்துரை செய்திருந்தது.

இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள தொழில்துறையினர், வணிகர்கள், கடை வியாபாரிகளிடம் எதிர்ப்பு எழுந்தது. வாடகை உயரும்; உற்பத்தி செலவு பல மடங்கு உயருமென தொழில்துறையினர் கவலை தெரிவித்தனர்.

அனைத்து வணிகர்கள் சங்கப்பேரவை சார்பில், திருப்பூரில் கடந்த 18ம் தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடந்தது. தமிழக அரசு சார்பிலும், இதுதொடர்பாக ஜி.எஸ்.டி., கவுன்சிலில் வலியுறுத்தப்பட்டது.

கடந்த, 21ம் தேதி நடந்த, 55வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், வணிக கட்டடத்துக்கு ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னலாடை தொழில்துறையினர் கூறுகையில், 'பெரும்பாலான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன. கடைகளும், வாடகை கட்டடத்தில் செயல்படுகின்றன. வாடகைக்கு வரிவிதிப்பு செய்தால், கடும் நிச்சுமையை சந்திக்க நேரிடும் என, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது நிம்மதியாக இருக்கிறது; இனிவரும் ஆண்டுகளிலும் சீராய்வு குழு பரிந்துரையை ஏற்கக்கூடாது,' என்றனர்.






      Dinamalar
      Follow us