sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பழங்குடியினருக்கான உதவி எண்கள் அறிவிப்பு

/

பழங்குடியினருக்கான உதவி எண்கள் அறிவிப்பு

பழங்குடியினருக்கான உதவி எண்கள் அறிவிப்பு

பழங்குடியினருக்கான உதவி எண்கள் அறிவிப்பு


ADDED : அக் 24, 2024 09:29 PM

Google News

ADDED : அக் 24, 2024 09:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து, புகார் அளிக்க உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் திருமூர்த்திமலை, அமராவதி, சின்னார் பகுதிகளில் பழங்குடியினர் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என, அரசுக்கும், வனத்துறையினருக்கும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிப்பதற்கும், அவர்களுக்கான சட்ட ஆலோசனைகள் வழங்குவதற்கும், தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவி மையங்கள் அமைக்கப்படும் என, அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் ஜாதி வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தகவல் தெரிவிப்பதற்கும், வழக்குப்பதிவு செய்வது தொடர்பான தகவல்களை பெறுவதற்கு, இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

புகார்களை பதிவு செய்வதற்கு, 18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பதிவு செய்யலாம்.

அரசு விடுமுறை நாட்கள் தவிர, மற்ற நாட்களில் இந்த எண்ணில் புகார்களை பதிவு செய்யலாமென, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் புகார்களை தெரிவித்து பயன்பெறலாம்.






      Dinamalar
      Follow us