ADDED : டிச 16, 2024 10:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்;சுல்தான்பேட்டை அடுத்த, வதம்பச்சேரி, ஓடக்கல்பாளையம் கிராமத்தில், 'பிரபஞ்ச அமைதி அறக்கட்டளை' முதியோர் காப்பகம் உள்ளது. இதில், 25க்கும் மேற்பட்ட முதியோர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
காப்பகத்தின், இரண்டாம் ஆண்டு விழா நடந்தது. சமூக ஆர்வலர் தங்கமணி ராமன் தலைமை வகித்தார். பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை, இமைகள் கண் தான அறக்கட்டளை தலைவர் சுந்தர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதியோருக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.