/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு; பொதுமக்கள் திண்டாட்டம்
/
பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு; பொதுமக்கள் திண்டாட்டம்
பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு; பொதுமக்கள் திண்டாட்டம்
பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு; பொதுமக்கள் திண்டாட்டம்
ADDED : ஆக 03, 2025 08:47 PM
உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்டில், பயணியர் நிற்குமிடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், பயணியர், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட வெளியூர், டவுன் பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும், ஆயிரக்கணக்கான பயணியர் பல்வேறு நகரங்களுக்கு செல்ல வருகின்றனர். இதனால், பஸ் ஸ்டாண்டில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். அங்கு திருப்பூர் பஸ்கள் நிற்குமிடத்தில் பயணியர் காத்திருப்பதற்கான இடம் உள்ளது. இங்கு சிறிய தற்காலிக கடைகள் போடப்படுகின்றன.
இதனால், பயணியர் அந்த இடத்தில் அமர முடியாமல் நின்று கொண்டு அவதிப்பட வேண்டியதுள்ளது. பெண்களும், குழந்தைகளும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து, பொதுமக்கள் நகராட்சிக்கு பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். பயணியருக்கு இடையூறாக போடப்படும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.