sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'போக்சோ' வழக்கில் தொடர்பு நபர் கோட்டை விட்ட ஒடிசா போலீசார்

/

'போக்சோ' வழக்கில் தொடர்பு நபர் கோட்டை விட்ட ஒடிசா போலீசார்

'போக்சோ' வழக்கில் தொடர்பு நபர் கோட்டை விட்ட ஒடிசா போலீசார்

'போக்சோ' வழக்கில் தொடர்பு நபர் கோட்டை விட்ட ஒடிசா போலீசார்


ADDED : மே 04, 2025 12:34 AM

Google News

ADDED : மே 04, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'போக்சோ' வழக்கில் தொடர்புடைய வாலிபரை பிடித்த ஒடிசா போலீசார், ஊருக்கு அழைத்து செல்ல ஆயத்தமான போது வாலிபர் தப்பி சென்றார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஹிரோனியா பாடி, 25. இவர் மீது 'போக்சோ' வழக்குபதிவு செய்து, அம்மாநிலத்தை சேர்ந்த போலீசார் தேடி வந்தனர். வாலிபர், திருப்பூர் வேலம்பாளையத்தில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்வது தெரிந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்வதற்காக, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த எஸ்.ஐ., ஸ்ரீமாறன் சிங் காந்தி தலைமையில் இரு போலீசார் திருப்பூருக்கு வந்தனர். பின், வேலம்பாளையம் போலீசார் உதவியுடன் வாலிபரை பிடித்தனர்.

இதையடுத்து, வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே ஓட்டலில் அறையடுத்து தங்கிய போலீசார், அவரை ஊருக்கு அழைத்து செல்ல நடைமுறை பணியை மேற்கொண்டு வந்தனர். டிக்கெட் முன்பதிவு செய்ய திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றிருந்த நிலையில், பாதுகாப்புக்கு இருந்த பெண் போலீசாரை தள்ளி விட்டு விட்டு, வாலிபர் கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டார். புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us