ADDED : அக் 25, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீநகரில், குருசங்கர், 36 என்பவர் அயர்னிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.
தீபாவளி கொண்டாட்டத்துக்காக 18ம் தேதி சொந்த ஊர் சென்றார். இவரது நிறுவனத்தில் , குருசங்கரின் நண்பரான காமராஜ், 42 என்பவர், கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். கொலையாளியை பிடிப்பதற்காக அனுப்பர்பாளையம் தனிப்படை போலீசார், கும்மிடிப்பூண்டிக்கு விரைந்தனர். குருசங்கரின் அயர்னிங் நிறுவனத்தில் பணிபுரிந்த, ஒடிசாவை சேர்ந்த கந்த்மணி சாசோ, 39 என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.

