sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 விதிமீறல் பிளக்ஸ் பேனர்கள் அதிகரிப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்

/

 விதிமீறல் பிளக்ஸ் பேனர்கள் அதிகரிப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்

 விதிமீறல் பிளக்ஸ் பேனர்கள் அதிகரிப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்

 விதிமீறல் பிளக்ஸ் பேனர்கள் அதிகரிப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்


ADDED : டிச 22, 2025 05:18 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலையில், பிரதான ரோடுகளில், அரசு, நீதிமன்ற உத்தரவுகளை மீறி, பிளக்ஸ் பேனர்கள் அதிகளவு வைக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.

உடுமலை நகர பகுதிகளில், ரோடு சந்திப்புகள், பஸ் ஸ்டாண்ட், வணிக வளாகங்கள் அதிகம் உள்ள பகுதி, பஸ் ஸ்டாப்கள் என அனைத்து பகுதிகளிலும், அரசியல் கட்சிகள், வணிக நிறுவனங்கள் சார்பில், நுாற்றுக்கணக்கான பிளக்ஸ் பேனர்கள் நிறுவப்பட்டுள்ளன.

பிரதான ரோடுகளான, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தாராபுரம் ரோடு, தளி ரோடு, திருப்பூர் ரோடு, ராஜேந்திரா ரோடு மற்றும் தளி ரோடு சந்திப்பு, பஸ் ஸ்டாண்ட், அனுஷம் ரோடு சந்திப்பு என அனைத்து இடங்களிலும், பிரமாண்ட பிளக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில், பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என, அரசு மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையிலும், விதிமீறி, அமைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால், கவன சிதறல், விபத்துகள் ஏற்படுகிறது.

பெரும்பாலான பகுதிகளில், பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப் மற்றும் ரோடுகளை மறைத்து வைத்துள்ளதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். பல இடங்களில் காற்றுக்கு தாங்காமல், வாகன ஓட்டுநர்கள் மீது விழுந்து விபத்துக்களையும் ஏற்படுத்துகிறது.

அதே போல், மடத்துக்குளம் நால்ரோடு, பஸ் ஸ்டாண்ட், கழுகரை உள்ளிட்ட பகுதிகளிலும், பெதப்பம்பட்டி, குடிமங்கலம் நான்கு ரோடு சந்திப்புகள், பஸ் ஸ்டாப் பகுதிகளிலும் ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

எனவே, விதிமீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்றவும், அவற்றை வைத்தவர்கள் மீதும், நகராட்சி, ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us