sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காட்சிப்பொருளாக குடிநீர் தொட்டி அதிகாரிகள் ஆய்வு செய்யணும்

/

காட்சிப்பொருளாக குடிநீர் தொட்டி அதிகாரிகள் ஆய்வு செய்யணும்

காட்சிப்பொருளாக குடிநீர் தொட்டி அதிகாரிகள் ஆய்வு செய்யணும்

காட்சிப்பொருளாக குடிநீர் தொட்டி அதிகாரிகள் ஆய்வு செய்யணும்


ADDED : ஜூலை 21, 2025 10:19 PM

Google News

ADDED : ஜூலை 21, 2025 10:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; கிராமங்களில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கட்டப்பட்ட கால்நடை குடிநீர் தொட்டி, காட்சிப்பொருளாக மாறியுள்ளது.

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றிய கிராமங்களில், கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது. மேய்ச்சலுக்கு செல்லும் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், தொட்டி கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

இந்த தொட்டியில், முறையாக தண்ணீர் நிரப்ப, குழாய் அமைத்தல் உள்ளிட்ட தேவைகளுக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அனைத்து கிராமங்களிலும், இந்த தொட்டி கட்டப்பட்ட நிலையில், முறையாக பராமரிக்கப்படவில்லை.

சில இடங்களில், பயன்பாட்டுக்கு வராமலேயே குடிநீர் தொட்டிகள் பராமரிப்பின்றி, காட்சிப்பொருளாக மாறி விட்டன.

பொது குடிநீர் தொட்டிகள் மட்டுமே கால்நடைகளுக்கான முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. ஆனால், குடிநீர் தொட்டிகளின் பராமரிப்பில், ஊராட்சி நிர்வாகத்தினர் அலட்சியமாக உள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள், கிராமந்தோறும் ஆய்வு செய்து, தொட்டியில், குடிநீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us