sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 தண்ணீரின் அருமை உணராத அதிகாரிகள்

/

 தண்ணீரின் அருமை உணராத அதிகாரிகள்

 தண்ணீரின் அருமை உணராத அதிகாரிகள்

 தண்ணீரின் அருமை உணராத அதிகாரிகள்


ADDED : டிச 11, 2025 04:47 AM

Google News

ADDED : டிச 11, 2025 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்ணீர் வீண்

முத்தணம்பாளையம், டி.வி.ஆர். நகரில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை குழியாகியுள்ளது.

- தங்கராஜ், முத்தணம்பாளையம். (படம் உண்டு)

நல்லுார், பிரபு நகர் எதிர்வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது; சாலையில் வழிந்தோடுகிறது.

- ராகவேந்திரன், பிரபு நகர். (படம் உண்டு)

காங்கயம் ரோடு, சி.டி.சி., கார்னர் ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.

- ேஷக்சமீரா, காங்கயம் ரோடு. (படம் உண்டு)

பாளையக்காடு, சேர்மன் கந்தசாமி நகரில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலை சேதமாகி வருகிறது.

- முருகன், பாளையக்காடு. (படம் உண்டு)

தாராபுரம் ரோடு, குறிஞ்சி நகர் சந்திப்பு சாலையில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை சேதமாகியுள்ளது.

- கோபாலகிருஷ்ணன், குறிஞ்சி நகர். (படம் உண்டு)

15 வேலம்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை குழியாகியுள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.

- சுதர்சன், 15 வேலம்பாளையம். (படம் உண்டு)

மாநகராட்சி, 32வது வார்டு, சூர்யா காலனி முதல் வீதியில் உப்புத்தண்ணீர் குழாய் கேட்வால்வு பழுதாகி, அடைத்தாலும் தண்ணீர் வீணாகிறது. கேட்வால்வு மாற்ற வேண்டும்.

- கோவிந்தசாமி, சூர்யா காலனி (படம் உண்டு)

----------------------

கால்வாய் அடைப்பு

பெருமாநல்லுார், கணக்கம்பாளையம் பிரிவு சந்திப்பு சாலையில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வழிந்தோடுகிறது. வீதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.

- நாகராஜ், கணக்கம்பாளையம். (படம் உண்டு)

------------------

சாலை சேதம்

சந்திராபுரம், பாரதிநகர் சாலை சேதமாகி நான்கு மாதமாகியும் சரி செய்யவில்லை. தினம் ஒரு விபத்து நடக்கிறது.- கோகுல், சந்திராபுரம். (படம் உண்டு)

-----------------

எரியாத விளக்கு

ஊத்துக்குளி ரோடு, முதல் ரயில்வே கேட்டில் இருந்து, இரண்டாவது ரயில்வே கேட் வரை தெருவிளக்குகள் எரிவதில்லை.

- பாலசரவணன், கே.பி.என். காலனி.

----

குப்பை தேக்கம்

செல்லாண்டியம்மன் துறை, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு எதிரே குப்பை நிறைந்து சாலை பாதி வரை வந்துள்ளது. தேங்கிய குப்பைகளை வாரம் ஒருமுறையாவது அள்ள வேண்டும்.

- வாஞ்சிநாதன், மிஷின் வீதி.

----

பல்லாங்குழி சாலை

கோவில்வழியில் இருந்து செவந்தாம்பாளையம் வரும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.

- செல்வம், செவந்தாம்பாளையம். (படம் உண்டு)






      Dinamalar
      Follow us