/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பழைய சார் பதிவாளர் அலுவலகம் அவிநாசியில் விரைவில் புனரமைப்பு'
/
'பழைய சார் பதிவாளர் அலுவலகம் அவிநாசியில் விரைவில் புனரமைப்பு'
'பழைய சார் பதிவாளர் அலுவலகம் அவிநாசியில் விரைவில் புனரமைப்பு'
'பழைய சார் பதிவாளர் அலுவலகம் அவிநாசியில் விரைவில் புனரமைப்பு'
ADDED : ஆக 06, 2025 11:00 PM

அவிநாசி; 'அவிநாசியிலுள்ள பழைய சார் பதிவாளர் அலுவலகத்தில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் பயன்பாட்டுக்கு வரும்,'' பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை நேற்று பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். பின், அவிநாசியில் சேவூர் ரோட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது பத்திர எழுத்தாளர்கள், 'அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பழைய சார் பதிவாளர் அலுவலகத்தில் மீண்டும் பணிகளை துவக்க வேண்டும். தற்போதுள்ள அலுவலகம் பொதுமக்கள் வந்து போக, வசதி இல்லாமலும், வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லாமலும், அலுவலகத்தில் இடநெருக்கடியாகவும் உள்ளது,' என்றனர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், ''பழைய சார் பதிவாளர் அலுவலகம் 150 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக உள்ளது. அதனால் அதை இடிக்காமல் புனரமைத்து மராமத்து பணிகள் செய்து புதுப்பொலிவுடன் விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கான நிதி ஒதுக்குவதற்கும், புராதன கட்டடங்களை பாதுகாத்து வரும் தொல்லியல் துறையின் அனுமதி பெறவும், பழைய அலுவலகத்தில் உள்ள பழமையான மரங்களை வெட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.'' என்றார்.
சென்னை பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கோவை துணை பதிவுத்துறை தலைவர் பிரபாகர், மண்டல உதவி பதிவுத்துறை தலைவர் ஸ்ரீ சித்ரா, திருப்பூர் மாவட்ட உதவி பதிவுத்துறை தலைவர் ஜெயப் பிரகாஷ், அவிநாசி சார் பதிவாளர்கள் பாலசுப்ர மணியன், சுந்தரவடிவேல் உடனிருந்தனர்.