sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அசுர வேகத்தில் செல்லும் ஆம்னி வேன்கள்

/

அசுர வேகத்தில் செல்லும் ஆம்னி வேன்கள்

அசுர வேகத்தில் செல்லும் ஆம்னி வேன்கள்

அசுர வேகத்தில் செல்லும் ஆம்னி வேன்கள்


ADDED : ஜூலை 03, 2025 08:25 PM

Google News

ADDED : ஜூலை 03, 2025 08:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதியில், சில ஆம்னி வேன்கள் அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக செல்வதால், விபத்துகள் அதிகரிக்கின்றன.

உடுமலை சுற்றுப்பகுதியில், குறிப்பாக நகரை சுற்றிலும் அரசு, தனியார் பள்ளிகள் 20க்கும் அதிகமாக உள்ளன. ஜூன் முதல் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்ல பஸ் வசதி உள்ளது. அனைத்து பெற்றோரும், பஸ் வசதியை பயன்படுத்துவதில்லை. பள்ளி மாணவர்களை அழைத்து செல்வதற்கு ஆம்னி வாகனங்களும் செயல்படுகின்றன.

குழந்தைகளை ஏற்றிச்செல்லும் இந்த வாகனங்கள், காலை, மாலை நேரங்களில் நகரில் அசுர வேகத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. எதிரே வருவோரை அச்சுறுத்தும் வகையில், ஆம்னி வாகனங்கள் மோசமாக செல்வதால், பலரும் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.

பழநிரோடு, தளி ரோடு, ஐஸ்வர்யா நகர், காந்திநகர் பகுதிகளில் இந்த வாகனங்கள் அதிவேகமாக பறந்து செல்கின்றன. வளைவுகளிலும் வேகத்தை குறைக்காமல், மாணவர்களையும் பயமுறுத்தும் வகையில்தான் செல்கின்றன.

போக்குவரத்து போலீசார், விதிமுறை மீறி அதிவேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us