sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சின்னவெங்காய விதை உற்பத்தி; விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்

/

சின்னவெங்காய விதை உற்பத்தி; விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்

சின்னவெங்காய விதை உற்பத்தி; விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்

சின்னவெங்காய விதை உற்பத்தி; விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்


ADDED : நவ 07, 2024 08:00 PM

Google News

ADDED : நவ 07, 2024 08:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை ; உடுமலை, குடிமங்கலம் பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, சின்னவெங்காய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இச்சாகுபடியில், விதை வெங்காயம் மற்றும் நாற்று என இருமுறையில், இரு சீசன்களில் நடவு செய்யப்படுகிறது.

நடவு சீசனில், விதை மற்றும் நாற்று விலை பல மடங்கு உயர்வதால், விவசாயிகள் பாதிக்கின்றனர்.

இது குறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது: விதை உற்பத்திக்காக பராமரிக்கப்படும் சின்ன வெங்காய வயல்களில், கலவன்களை நீக்கி விட வேண்டும். செடிகளின் உயரம், இலை மற்றும் பூங்கொத்துகளின் நிறம் அடிப்படையில், வயல்களில் எளிதாக கலவன்களை கண்டறியலாம்.

விதைகள் நன்கு முதிர்ந்த பின், அறுவடை செய்ய வேண்டும். வெங்காயத்தில் விதை அறுவடை தருணத்தில் உள்ளது போல, பூங்கொத்தில், 50 சதவீத கருப்பு விதைகள் வெளியில் தெரியும். அச்சமயத்தில் அறுவடை செய்ய வேண்டும்.

விதை உற்பத்தி செய்யும், விவசாயிகள், விதை சான்றளிப்பு பெறலாம். விதையின் இனத்துாய்மை, தரம் குறித்து, சான்றளிப்பு பெறும் போது எளிதாக தெரிந்து கொள்ளலாம்,' இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us