/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தனியார் நிறுவனம் பங்களிப்பு அங்கன்வாடி மையம் திறப்பு
/
தனியார் நிறுவனம் பங்களிப்பு அங்கன்வாடி மையம் திறப்பு
தனியார் நிறுவனம் பங்களிப்பு அங்கன்வாடி மையம் திறப்பு
தனியார் நிறுவனம் பங்களிப்பு அங்கன்வாடி மையம் திறப்பு
ADDED : மார் 08, 2026 06:10 AM

திருப்பூர்: தாராபுரம் தாலுகா, மூலனுார் பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டை மூலனுார் கிராமத்தில், அங்கன்வாடி மைய திறப்பு விழா நேற்று நடந்தது.
ஜெ.எஸ்.டபிள்யூ., நிறுவனம் சார்பில், அங்கன்வாடி மையம் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டிக்கொடுக்கப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த, 25 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
புதிய அங்கன்வாடி மையம், நேற்று பயன்பாட்டுக்காக ஒப்படைக்கப்பட்டது. ஊர்பொதுமக்கள் முன்னிலையில், ஜெ.எஸ்.டபிள்யூ., நிறுவனத்தின் திட்ட மேலாளர் சீனிவாசன், சமூக பொறுப்பு நிதி பிரிவு தலைவர் பாரதி ஆகியோர், அங்கன்வாடி மைய கட்டடத்தை, மூலனுார் பேரூராட்சி தலைவர் தண்டபாணியிடம் ஒப்படைத்தனர்.
'சீடு' தொண்டு நிறுவன தலைவர் ராஜேந்திரன், அங்கன்வாடி மைய அமைப்பாளர் அம்மாசை, பணியாளர்கள் மணி, கலாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

