sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புதிய தொழில்நுட்பத்தை தொழிலாக மாற்ற வாய்ப்பு; தொழில் முனைவோராக அழைக்கும் 'லகு உத்யோக் பாரதி'

/

புதிய தொழில்நுட்பத்தை தொழிலாக மாற்ற வாய்ப்பு; தொழில் முனைவோராக அழைக்கும் 'லகு உத்யோக் பாரதி'

புதிய தொழில்நுட்பத்தை தொழிலாக மாற்ற வாய்ப்பு; தொழில் முனைவோராக அழைக்கும் 'லகு உத்யோக் பாரதி'

புதிய தொழில்நுட்பத்தை தொழிலாக மாற்ற வாய்ப்பு; தொழில் முனைவோராக அழைக்கும் 'லகு உத்யோக் பாரதி'


ADDED : ஜன 02, 2025 06:14 AM

Google News

ADDED : ஜன 02, 2025 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; மத்திய அரசின் புதிய தொழில்நுட்பங்களை, புதிய தொழிலாக மாற்றும் முயற்சியாக, 'லகு உத்யோக் பாரதி' சார்பில், தொழில்நெறி வழிகாட்டு கருத்தரங்கு நாளை திருப்பூரில் நடக்கிறது.

பிரதமர் மோடி தலைமையில் இயங்கும், அறிவியல் தொழில்நுட்ப தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.,), புதிய தொழில்நுட்பங்களை கண்டறிந்து, அதன் வாயிலாக தொழிலை மேம்படுத்த வழிகாட்டும் அமைப்பாக இயங்கி வருகிறது.

அதாவது, ஐ.ஐ.டி., போன்ற தொழில்நுட்ப மையங்கள் மூலமாக, புதிய தொழில்நுட்பம் கண்டறியப்படுகிறது.

பயனுள்ள தொழில்நுட்பங்களை பகுப்பாய்வு செய்து, உறுதி செய்த பின், அவற்றை தொழில் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் பயன்படுத்த வழங்கப்படுகிறது.

அதன்படி, 50க்கும் அதிகமான தொழில்நுட்பங்கள், தொழில்களை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் புதிய யோசனைகள் தொழிலாக உருமாற்றம் செய்யும் வாய்ப்பை, 'லகு உத்யோக் பாரதி' அமைப்பு உருவாக்கி கொடுக்கிறது.

தொழில்துறையினரை அழைத்து சென்று, சென்னையில் உள்ள ஐ.ஐ.டி., மையத்தில் விரிவான தொழில்நுட்ப கருத்தரங்கு நடத்தியது. அதன் வாயிலாக, ஏராளமான தொழில்முனைவோர், தங்களது பயணத்தை துவக்க இருக்கின்றனர்.

சி.எஸ்.ஐ.ஆர்., மற்றும் 'சிட்பி' வங்கி சார்பில், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு புதிய தொழில் துவங்குவதற்கான வழிகாட்டுதலை வழங்கும் கருத்தரங்கு நடத்த, 'லகு உத்யோக் பாரதி' ஏற்பாடு செய்துள்ளது.

'சிட்பி' வங்கி வாயிலாக, புதிய தொழில்துவங்கும் கடன் திட்டங்களை வழங்கி, தொழில்முனைவோர்களை உருவாக்க, 'லகு உத்யோக்பாரதி' களமிறங்கியுள்ளது.

அதற்காக, திருப்பூர் சைமா அலுவலக கூட்டரங்கில், நாளை (3ம் தேதி) மாலை 5:30 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, அதற்கான வழிகாட்டி கருத்தரங்கு நடக்க உள்ளது.

அற்புதமான வாய்ப்பு!


இதுகுறித்து 'லகு உத்யோக் பாரதி' அமைப்பின் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''மத்திய அரசின் புதிய தொழில்நுட்பத்தையும், வங்கி கடன் திட்டங்களையும் பயன்படுத்தி, புதிய தொழில்களை துவக்குவது குறித்து வழிகாட்டுதல் கருத்தரங்கு நடக்க உள்ளது.

'லகு உத்யோக் பாரதி'யின் மாநில இணை பொது செயலாளர் ஜெயேந்திரன், ஈரோடு மாவட்ட தலைவர் இளங்கோ, இணை செயலாளர் லாண்யா, 'சிட்பி' வங்கியின் துணை பொதுமேலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று பேச உள்ளனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us