sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கணியூர் பேரூராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு

/

கணியூர் பேரூராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு

கணியூர் பேரூராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு

கணியூர் பேரூராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு


ADDED : ஜன 12, 2025 11:08 PM

Google News

ADDED : ஜன 12, 2025 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; கணியூர் பேரூராட்சியுடன், ஜோத்தம்பட்டியை இணைப்பதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மடத்துக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஜோத்தம்பட்டி ஊராட்சியை, அருகிலுள்ள கணியூர் பேரூராட்சியுடன் இணைப்பதற்கான அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு, ஜோத்தம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம், ஜோத்தம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது. இதில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பதிவு செய்து, பயன்பெறுகின்றனர். விவசாயத்துக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், சிறு, குறு விவசாயிகளும் பாதிப்பு ஏற்படும்.

பேரூராட்சியுடன் இணைக்கப்பட்டால், ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள், விவசாயிகள் மட்டுமன்றி, சொத்து வரி உள்ளிட்ட வரி இனங்களும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது, என, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஊராட்சி பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு, கணியூர் பேரூராட்சியுடன் ஜோத்தம்பட்டி ஊராட்சியை இணைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிப்பது, என, முடிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us