sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூரில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு; அ.தி.மு.க., - கம்யூ., கவுன்சிலர்கள் கைது

/

திருப்பூரில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு; அ.தி.மு.க., - கம்யூ., கவுன்சிலர்கள் கைது

திருப்பூரில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு; அ.தி.மு.க., - கம்யூ., கவுன்சிலர்கள் கைது

திருப்பூரில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு; அ.தி.மு.க., - கம்யூ., கவுன்சிலர்கள் கைது


ADDED : நவ 29, 2024 07:17 AM

Google News

ADDED : நவ 29, 2024 07:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : சொத்து வரி உயர்வை கண்டித்து மறியல் செய்த திருப்பூர் மாநகராட்சி அ.தி.மு.க., - காங்., - இந்திய கம்யூ., - மா.கம்யூ., - த.மா.கா., கவுன்சிலர்கள் கைது செய்யப்பட்டனர்.

சொத்து வரி ஆறு சதவீதம் உயர்த்தப்பட்டது தொடர்பாக நேற்று நடந்த திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில், கவுன்சிலர்கள் விவாதம் மேற்கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும், மாநகராட்சி அலுவலகம் எதிரேயுள்ள மங்கலம் சாலையில் அமர்ந்து இந்திய கம்யூ., கவுன்சிலர்கள் 5 பேர், காங்., - த.மா.கா., - மா.கம்யூ., கவுன்சிலர்கள் தலா ஒருவர் மறியல் செய்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 17 பேர், அதே இடத்தில் சற்று தள்ளி ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சு நடத்திய போலீசாருடன் கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர். போலீசார் அவர்களை குண்டுக்கட்டாகத் துாக்கி, வாகனங்களில் ஏற்றி கைது செய்து அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.இந்திய கம்யூ., குழு தலைவர் ரவிச்சந்திரனை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முயன்ற போது, போலீசாருடன் மற்ற கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம் செய்தததால் பரபரப்பு நிலவியது.

கைதான அ.தி.மு.க., கவுன்சிலர்களை எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஆனந்தன் உள்ளிட்டோரும், கம்யூ., கவுன்சிலர்களை அக்கட்சி நிர்வாகிகளும் சந்தித்து பேசினர்.

பொள்ளாச்சி ஜெயராமன் வேதனை

கைதான அ.தி.மு.க., கவுன்சிலர்களை சந்தித்து பேசிய அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க., ஆட்சியில் இருக்கும் வரை, சோதனை காலம்தான். அ.தி.மு.க.,வின் கடந்த பத்து ஆண்டு கால ஆட்சியில், ஒருமுறை கூட வீட்டு வரி உயர்த்தப்படவில்லை. வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வை பொதுமக்கள் வெற்றிபெறச் செய்யவேண்டும்.பொருத்தமற்ற கொள்கைகள், தேவையற்ற வரி உயர்வால், வரி செலுத்துவதற்காகவே உழைக்கிறோமா என்கிற சலிப்பு தொழிலளர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் ஏற்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us