/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றம்; இரு மாவட்ட மக்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்'
/
அமராவதி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றம்; இரு மாவட்ட மக்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்'
அமராவதி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றம்; இரு மாவட்ட மக்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்'
அமராவதி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றம்; இரு மாவட்ட மக்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்'
UPDATED : ஜன 10, 2024 05:16 AM
ADDED : ஜன 10, 2024 12:56 AM

உடுமலை;உடுமலை அமராவதி அணை நடப்பாண்டில், முதல் முறையாக நேற்று நிரம்பியது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில் அமைந்துள்ள அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து, ஆற்றின் வழியோரத்திலுள்ள, இரு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
நேற்று மதியம், 12:30 மணிக்கு, ஆற்றில் உபரி நீர் வெளிப்போக்கி மதகுகள் வழியாக, வினாடிக்கு, 3 ஆயிரம் கனஅடி நீர் வரை வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து, படிப்படியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
நேற்று மாலை, 6:00 மணி நிலவரப்படி, அணை நீர்மட்டம், மொத்தமுள்ள, 90 அடியில், 88.95 அடியாகவும், மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 3,951.79 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 4,560 கனஅடி நீர்வரத்து இருந்தது.
அணை பாதுகாப்பு கருதி, ஆற்றில் வினாடிக்கு, 6,800 கனஅடி, பிரதான கால்வாயில், 300 கனஅடி என, 7,100 கனஅடி நீர் திறக்கப்பட்டிருந்தது. அணை நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து, கண்காணித்து, வரும் நீர் அனைத்தையும் உபரியாக வெளியேற்றி வருகின்றனர்.
அதிகாரிகள் எச்சரிக்கை
அணை வழியோர கிராமங்களுக்கு, நேற்று ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. அணையிலிருந்து, வினாடிக்கு, 6,500 கனஅடி நீர் திறக்கப்பட்டால், 'புளூ' வண்ண எச்சரிக்கையும், 6,500 முதல், 13 ஆயிரம் கனஅடி வரை, திறக்கப்பட்டால், 'ஆரஞ்ச்' வண்ண எச்சரிக்கையும், அதற்கு மேல், சிவப்பு வண்ண எச்சரிக்கையும் விடப்படுகிறது.
தற்போது, ஆரஞ்ச் அலர்ட் உள்ள நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கனமழை தொடர்ந்தால், 'ரெட் அலர்ட்' வாய்ப்பு உள்ளதாகவும், பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம், என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

