sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கூட்டுறவு சங்க செயலர்கள்'டிரான்ஸ்பர்' செய்ய உத்தரவு

/

கூட்டுறவு சங்க செயலர்கள்'டிரான்ஸ்பர்' செய்ய உத்தரவு

கூட்டுறவு சங்க செயலர்கள்'டிரான்ஸ்பர்' செய்ய உத்தரவு

கூட்டுறவு சங்க செயலர்கள்'டிரான்ஸ்பர்' செய்ய உத்தரவு


ADDED : மே 10, 2025 02:45 AM

Google News

ADDED : மே 10, 2025 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : தமிழகம் முழுவதும் மூன்றாண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் கூட்டுறவு சங்க செயலர்களை இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், அனைத்து மண்டல கூட்டுறவு இணை பதிவாளர்களுக்கு பிறப்பித்த உத்தரவு வருமாறு:

கடந்த 2019 மற்றும் 2024 ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் படி, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் செயலர்கள் மற்றும் உதவி செயலர்கள் பணியிடங்கள் அனைத்தும் பொதுப்பணி நிலைத்திறனின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி தாய் சங்கத்திலோ, சொந்த ஊரில் உள்ள சங்கத்திலோ அவர்கள் பணி புரியக்கூடாது. இந்த விதிகளின்படி கடந்த மார்ச் 31 ம் தேதியில், மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக ஒரே சங்கத்தில் பொதுப்பணி நிலைத்திறன் கொண்ட அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும். இதன் மீதான நடவடிக்கைகளை நிறைவு செய்து, மே 31ம் தேதிக்குள் உரிய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us