sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பொங்கிய கழிவுநீர்; அடைக்க பிரயத்தனம்

/

பொங்கிய கழிவுநீர்; அடைக்க பிரயத்தனம்

பொங்கிய கழிவுநீர்; அடைக்க பிரயத்தனம்

பொங்கிய கழிவுநீர்; அடைக்க பிரயத்தனம்


ADDED : அக் 19, 2024 11:55 PM

Google News

ADDED : அக் 19, 2024 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், யூனியன் மில் ரோட்டில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கான்கிரீட் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோட்டின் மையப்பகுதியில் பாதாள சாக்கடை திட்ட கழிவு நீர் சேகரிப்பு குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை இதில் ஓரிடத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக ஒரு இடத்தில் ஆள் இறங்கு குழியின் மீது அமைத்திருந்த இரும்பு மூடியை பொத்துக் கொண்டு கழிவு நீர் வெளியேறியது.

ஒரு சில நொடிகளில் இந்த கழிவின் வேகம் அதிகரித்து, ரோடு முழுவதும் பாய்ந்து பரவியது. இதனால் ரோட்டில் வாகனங்கள் செல்வதிலும் பாதசாரிகள் கடந்து செல்வதிலும் பெரும் சிரமம் நிலவியது. தகவல் அறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்தனர். கழிவு நீர் பொங்கிய பகுதியில் அருகிலிருந்த ஆள் இறங்கு குழியில் அடைப்பை சரி செய்யும் பணியை மேற்கொண்டனர்.

இப்பணி ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நடந்தது. அதன் பின், அடைப்பு முற்றிலும் அகற்றப்பட்டு கழிவு நீர் முறையாக குழாயில் கடந்து சென்றது.






      Dinamalar
      Follow us