ADDED : அக் 26, 2025 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில், பெயின்டர் பரிதாபமாக இறந்தார்.
திருப்பூர், காங்கயம் ரோடு, நாச்சிபாளையத்தை சேர்ந்தவர் குச்சு குட்டன், 54. பெயின்டர்.
நேற்று மாலை வீட்டில் இருந்து டூவீலரில்சென்று கொண்டிருந்தார். நாச்சிபாளையம் அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த சரக்குலாரி, டூவீலர் மீது மோதியது.
இதில் கீழே விழுந்த குச்சு குட்டன் மீது, லாரியின் டயர் தலை மீது ஏறி பரிதாபமாக இறந்தார். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

