/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓவிய போட்டி; மாணவருக்கு பாராட்டு
/
ஓவிய போட்டி; மாணவருக்கு பாராட்டு
ADDED : ஆக 12, 2025 07:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலையில் நடந்த மாநில அளவிலான ஓவிய போட்டியில், வெற்றி பெற்ற மாணவருக்கு பெத்தேல் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
உடுமலை எஸ்ஐபி அகாடமி சார்பில், பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஓவியப்போட்டி ஐஸ்வர்யா நகரில் நடந்தது. இப்போட்டில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில் உடுமலை பெத்தேல் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர் நலின், முதலிடம் பெற்று பரிசு பெற்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு ஓவிய ஆசிரியர் பிரபாகர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.