/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பழநி தைப்பூச விழா ஏற்பாடுகள் சிறப்பு'
/
'பழநி தைப்பூச விழா ஏற்பாடுகள் சிறப்பு'
ADDED : பிப் 03, 2026 06:39 AM

பல்லடம்: பல்லடத்தை சேர்ந்த, இடுவாய் ஓம் சரவணா காவடிக்குழு நிர்வாகி சுந்தரராஜன் கூறியதாவது:
தைப்பூச விழாவை முன்னிட்டு, கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக, பழநி முருகனுக்கு மாலை அணிந்து, காவடி எடுத்தபடி, பழநி பாதயாத்திரை சென்று வருகிறோம். முன் எப்போதும் இல்லாத வகையில், இம்முறை தைப்பூச விழா ஏற்பாடுகள் வியப்பை ஏற்படுத்தியது. மலை மேல் செல்லும் பக்தர்கள் ஒழுங்குபடுத்தி, வரிசையாக அனுப்பப்பட்டனர். பக்தர்களை வெயிலில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
தள்ளுமுள்ளு ஏற்படாமல் பக்தர்கள் அனுப்பப்பட்டனர். வழியெங்கும் குடிநீர், கழிப்பிடம், முதலுதவி மையம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தது. துாய்மை பணியை சிறப்பாக கையாண்டனர். கோவில் நிர்வாகத்தை பாராட்டுகிறோம்.

