ADDED : நவ 14, 2024 04:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழங்கரை, பகவதி தேவநாயகி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி, பேரொளி வழிபாடு, மலர் அர்ச்சனை ஆகியவை நடந்தன.
தொடர்ந்து, பகவதி தேவநாயகி அம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின், அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது. கோவில் விழா கமிட்டி சார்பில், பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.