/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பன்னீர்செல்வம் அணியினர் உதயகுமார் மீது புகார்
/
பன்னீர்செல்வம் அணியினர் உதயகுமார் மீது புகார்
ADDED : அக் 28, 2024 06:19 AM
திருப்பூர்: முன்னாள் அமைச்சர் உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பன்னீர்செல்வம் அணியினர் திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் உதயகுமார், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் குறித்து சமீபத்தில் சில கருத்துகளைத் தெரிவித்தார். அப்போது, 'பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிடுவோம்' என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், பன்னீர்செல்வம் குறித்து அவதுாறாக பேசிய உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பன்னீர்செல்வம் அணியின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகம், புறநகர் மாவட்ட செயலாளர் காமராஜ், மாநகர வடக்கு மாவட்ட செயலாளர் சிவகுமார் உள்ளிட்டோர், திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.