/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிழற்கூரையின்றி பயணியர் தவிப்பு
/
நிழற்கூரையின்றி பயணியர் தவிப்பு
ADDED : ஏப் 24, 2025 10:37 PM
உடுமலை; உடுமலையில் முக்கிய பஸ் நிறுத்தத்தில் நிழற்கூரை இல்லாததால், பஸ் ஏற வரும் பயணியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
உடுமலை தளி ரோட்டில், நகராட்சி அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதில், யூனியன் பஸ் நிறுத்தம் முக்கியமானதாக உள்ளது.
இந்த பஸ் நிறுத்தத்திற்கு பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் மக்கள் வருகின்றனர். அவர்களுக்கு இங்கு நிழற்கூரை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், திறந்த வெளியில் வெயிலில் நின்று பொதுமக்கள், பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, யூனியன் பஸ் ஸ்டாப்பில், பயணியர் நிழற்கூரை அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.