sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பாஸ்போர்ட் சேவா கேந்திரா 24ம் தேதி திருப்பூரில் திறப்பு

/

பாஸ்போர்ட் சேவா கேந்திரா 24ம் தேதி திருப்பூரில் திறப்பு

பாஸ்போர்ட் சேவா கேந்திரா 24ம் தேதி திருப்பூரில் திறப்பு

பாஸ்போர்ட் சேவா கேந்திரா 24ம் தேதி திருப்பூரில் திறப்பு


ADDED : ஜன 20, 2025 11:38 PM

Google News

ADDED : ஜன 20, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா வரும் 24ம் தேதி துவங்கப்படவுள்ளது.

திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில், ரயில்வே ஸ்டேஷன் எதிரில் தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு தபால் துறையின் சேவைகள் மற்றும் ஆதார் மையமும் இயங்கி வருகிறது. தற்போது திருப்பூர் பகுதி மக்களின் வசதிக்காக பாஸ்போர்ட் சேவா கேந்திரா அமைக்கப்படவுள்ளது.

வரும் 24ம் தேதி காலை 11:00 மணிக்கு இதன் துவக்க விழா நடக்கிறது. முதன்மை பாஸ்போர்ட் அலுவலர் சீனிவாசன், மேற்கு மண்டல தபால் துறை தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

கலெக்டர், போலீஸ் மற்றும் மாநகராட்சி கமிஷனர்கள், எஸ்.பி., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மேயர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

திருப்பூர் பகுதி மக்கள் தங்கள் பாஸ்போர்ட் தொடர்பான பணிக்காக கோவை சென்று வர வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்கும் வகையில் பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் உள்ளிட்ட முதல் கட்டப்பணிகள், டோக்கன் வழங்குதல் ஆகியன இம்மையம் மூலமாகவே மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கோவை பாஸ்போர்ட் அலுவலகம் சென்று வரும் அலைச்சல் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us