ADDED : பிப் 15, 2025 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் உடுமலை கிளையின் சிறப்பு கூட்டம் நடந்தது.
உடுமலையில் நடந்த கூட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நில அளவைத்துறை உட்பட பல துறைகளைச்சேர்ந்த ஓய்வு பெற்ற அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். சங்கத்தின் அமைப்பு செயலாளர் கணேசன் நன்றி தெரிவித்தார்.