/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓய்வூதியர் சங்க மாவட்ட அளவிலான கூட்டம்
/
ஓய்வூதியர் சங்க மாவட்ட அளவிலான கூட்டம்
ADDED : டிச 24, 2024 10:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை, ; தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க, மாவட்ட அளவிலான கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க, மாவட்ட அளவிலான கூட்டம் திருமூர்த்திமலையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்த் துவக்கி வைத்தார்.
சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சுந்தர்ராஜ் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
உடுமலை வட்ட பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். நுாற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.