sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பராமரிப்பில்லாத ரோடுகள் சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

/

பராமரிப்பில்லாத ரோடுகள் சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

பராமரிப்பில்லாத ரோடுகள் சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

பராமரிப்பில்லாத ரோடுகள் சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : மே 24, 2025 06:39 AM

Google News

ADDED : மே 24, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: கணக்கம்பாளையம் ஊராட்சி எஸ்.வி.,புரம் பகுதியில், பராமரிப்பில்லாத ரோடுகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையத்தில், நகரை யொட்டியுள்ளது எஸ்.வி.,புரம் குடியிருப்பு பகுதி. இப்பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நகரையொட்டியுள்ளதால் இங்கு வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேலும், கணக்கம்பாளையத்தின் பிரதான பகுதியாகவும் உள்ளது. இங்குள்ள பல லே-அவுட்களில் முறையான ரோடு வசதி இல்லை. ரோடுகள் குண்டும் குழியுமாகவும், ஏற்கனவே போடப்பட்ட ரோடுகளும் பெயர்ந்த நிலையிலும் உள்ளன.

இதனால், மழை நாட்களில் பொதுமக்கள் வெளியில் சென்று வருவதற்கு, சிரமப்படுகின்றனர். மேடுபள்ளமாக உள்ள ரோடுகளை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us