sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கடை வீதிகளில் மக்கள் வெள்ளம்

/

கடை வீதிகளில் மக்கள் வெள்ளம்

கடை வீதிகளில் மக்கள் வெள்ளம்

கடை வீதிகளில் மக்கள் வெள்ளம்


ADDED : அக் 11, 2024 12:39 AM

Google News

ADDED : அக் 11, 2024 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : ஆயுத பூஜை கொண்டாட பூஜைப்பொருட்களை வாங்க திருப்பூர் கடைவீதிகளில் பொதுமக்கள் நேற்று திரண்டனர்.

இன்று ஆயுத பூஜை; சரஸ்வதி பூஜை; நாளை விஜயதசமி; திருப்பூரில் உள்ள கடைவீதிகளில் நேற்று பூ, பழம், பொரி உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

செவ்வந்தி உள்ளிட்ட பூக்களின் விலை அதிகரித்திருந்தது. சாலைகள் வாகன நெரிசலுடன் காணப்பட்டன.

ஆயுத பூஜை, விஜயதசமி, ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை காரணமாக, திருப்பூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு தொழிலாளர் பலரும் பயணமாகியுள்ளனர். நேற்று இரவு முதல் பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது.

திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு, 35 பஸ்கள், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, சேலம், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பகுதிக்கு, 15 பஸ், திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிக்கு, 15 பஸ்கள் என மொத்தம், 65 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

'பெரும்பாலான சிறப்பு பஸ்கள் இயக்கம் இரவு, 11:00 மணிக்கு முன்பாக முடிவதால், வெளியூர் செல்வோர் முன்பாகவே பஸ் ஸ்டாண்ட் வந்து தங்கள் இருக்கைகளுக்கு பூர்த்தி செய்து கொள்ளலாம்,' என, திருப்பூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us