sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மக்கள் நீதிமன்றம் மார்ச் 8ல் கூடுகிறது

/

மக்கள் நீதிமன்றம் மார்ச் 8ல் கூடுகிறது

மக்கள் நீதிமன்றம் மார்ச் 8ல் கூடுகிறது

மக்கள் நீதிமன்றம் மார்ச் 8ல் கூடுகிறது


ADDED : பிப் 20, 2025 05:51 AM

Google News

ADDED : பிப் 20, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட அளவில் வரும் மார்ச் 8ம் தேதி மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதில் பங்கேற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், வரும் மார்ச் 8ம் தேதி, திருப்பூர் மாவட்ட கோர்ட் வளாகம் மற்றும் அனைத்து தாலுகா அளவிலான கோர்ட்டுகளிலும், லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளும் விதமான சமரசம் ஏற்படுத்தக் கூடிய சிவில் வழக்குகள்; குடும்ப நல வழக்குகள்; வாகன விபத்து இழப்பீடு வழக்குகள்; சிறு குற்ற வழக்குகள்; செக் மோசடி, வங்கி வராக் கடன் வழக்குகள், நில மோசடி வழக்குகள் ஆகியவற்றில் விசாரித்து தீர்வு காணப்படும்.

நீண்ட நாள் நிலுவையில் உள்ள இது போன்ற வழக்குகள் மற்றும் இரு தரப்பும் சமரசத்துக்கு தயாராக உள்ள வழக்குகள் இதில் விசாரணைக்கு ஏற்கப்படும். வழக்குதாரர்கள் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவை அணுகி பயன் பெறலாம்.






      Dinamalar
      Follow us