/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திடக்கழிவு முறைகேடு விசாரிக்க மனு
/
திடக்கழிவு முறைகேடு விசாரிக்க மனு
ADDED : ஜன 28, 2026 06:48 AM
திருப்பூர்: மங்கலம் ஊராட்சி கிராம சபா கூட்டம், சமுதாயக்கூடத்தில் நடந்தது. ஊராட்சியின் பொதுவான கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
த.வெ.க. வழக்கறிஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் தலைமையில், அக்கட்சியினர் அளித்த மனுவில், 'மங்கலம் ஊராட்சியில், திடக் கழிவு மேலாண்மை திட்ட பணிகளில் முறைகேடு நடந்துள்ளது.
மக்களிடம் சேகரிக்கப்படும் குப்பை, நொய்யல் ஆற்றோரமாக கொட்டப்படுகிறது. தினமும் குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. குப்பை சேகரித்து அகற்றும் பணியில் முறைகேடு நடந்துள்ளது. விசாரணைக்குழு அமைத்து, விசாரணை நடத்த, கலெக்டர் உத்தரவிட வேண்டும்,' என்று கூறப்பட்டுள்ளது.
l பெருமாநல்லுார் ஊராட்சியில் நடந்த கிராம சபாவில், வி.சி.க. நிர்வாகிகள் சார்பில் அளித்த மனுவில், 'பெருமாநல்லுார் ஊராட்சியில், ஐந்து மது பார்கள் உள்ளன.
இரவு, 10:00 மணிக்கு மூடாமல், 24 மணி நேரமும் விற்பனை நடக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம், தனியார் பார் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மதுபான கடைகளையும் முறைப்படுத்த வேண்டும்,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

