sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

எஸ்.வி.,புரம் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை அமைக்க மனு

/

எஸ்.வி.,புரம் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை அமைக்க மனு

எஸ்.வி.,புரம் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை அமைக்க மனு

எஸ்.வி.,புரம் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை அமைக்க மனு


ADDED : நவ 17, 2024 09:51 PM

Google News

ADDED : நவ 17, 2024 09:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை எஸ்.வி., புரத்தில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை அமைக்க வேண்டும், என, மனு அளிக்கப்பட்டது.

உடுமலை கொழுமம் ரோட்டில், எஸ்.வி., புரத்தில், பல ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்கள், பள்ளி கல்லுாரி மாணவர்கள், பஸ்சிற்காக ரோட்டிலேயே காத்திருக்கும் நிலை உள்ளது.

மேலும், பழநி ரோடு பகுதியில், உள்ள பள்ளிகள், கல்லுாரிகளுக்கு வரும் மாணவ, மாணவியரும், கொழுமம் ரோடு, எஸ்.வி.,புரத்திலிருந்து, பஸ்களில், ஏறி, இறங்கி வருகின்றனர்.

இவ்வாறு, எஸ்.வி.,புரம் பஸ் ஸ்டாப்பில், பொதுமக்கள், மாணவர்கள் என ஏராளமானவர்கள் காத்திருக்கும் நிலையில், அங்கு நிழற்கூரை இல்லாததால், வெயிலிலும், மழையிலும் காத்திருந்து பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.

எனவே, எஸ்.வி.,புரத்தில் பயணியர் நிழற்கூரை அமைக்க வேண்டும், என, இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி சார்பில், திருப்பூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, கணக்கம்பாளையம் பகுதியில் அரசு விழாவிற்கு வந்த, அமைச்சர் சாமிநாதன் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தார்.






      Dinamalar
      Follow us