sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புரோக்கர்களை கட்டுப்படுத்த கலெக்டரிடம் மனு

/

புரோக்கர்களை கட்டுப்படுத்த கலெக்டரிடம் மனு

புரோக்கர்களை கட்டுப்படுத்த கலெக்டரிடம் மனு

புரோக்கர்களை கட்டுப்படுத்த கலெக்டரிடம் மனு


ADDED : ஜன 23, 2025 11:47 PM

Google News

ADDED : ஜன 23, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் ; திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புரோக்கர்களை கட்டுப்படுத்தக் கோரி, குறைகேட்பு கூட்டத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது.

கலெக்டர் அலுவலக வளாகத்தில், மக்களுக்கு மனு எழுதிக்கொடுத்துவரும், 78 வயதான சண்முகவேலு, கலெக்டரிடம் அளித்த மனு:

திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நான் மக்களுக்கு மனு எழுதிக்கொடுத்து வருகிறேன். இதற்காக, மக்கள் அளிக்கும் தொகையை பெற்றுக்கொள்கிறேன்; வசதியில்லாதோருக்கு, இலவசமாக மனு எழுதிக்கொடுக்கிறேன்.

மிக குறைந்த கட்டணத்திலும், இலவசமாகவும் மனு எழுதிக்கொடுப்பது பிடிக்காத இடைத்தரகர்கள் சிலர், என்னை மிரட்டுகின்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் வலம் வரும் இடைத்தரகர்கள், மனு எழுதுவதற்காக வரும் பொதுமக்களிடம், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு, இலவச வீட்டுமனை பட்டா பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறுகின்றனர்.

அதிகாரிகளுக்கு கொடுக்கவேண்டும் என கூறி, பொதுமக்களிடமிருந்து, ஒரு லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை கறந்து விடுகின்றனர். புரோக்கர்களிடம் சிக்கி, ஏராளமானோர் பெருந்தொகையை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில், மக்களை ஏமாற்றும் புரோக்கர்களை கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us