sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குடிநீர் தட்டுப்பாடு அலுவலரிடம் மனு

/

குடிநீர் தட்டுப்பாடு அலுவலரிடம் மனு

குடிநீர் தட்டுப்பாடு அலுவலரிடம் மனு

குடிநீர் தட்டுப்பாடு அலுவலரிடம் மனு


ADDED : மே 24, 2025 05:58 AM

Google News

ADDED : மே 24, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி : அவிநாசி வட்டம், பழங்கரை ஊராட்சியில் பவானி ஆற்று நீரை குடிநீர் ஆதாரமாகக் கொண்டு, 708 வழியோர கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் பெரியாயிபாளையத்தில் ஒரு நீரேற்று நிலையம் மற்றும் பச்சம்பாளையத்தில் ஒரு நீரேற்று நிலையம் மூலம் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

இதில், பச்சாம்பாளையத்தில் இருந்து குளத்துப்பாளையம்,தேவம்பாளையம், அவிநாசிலிங்கம் பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு தற்போது தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், அதில் அவிநாசிலிங்கம் பாளையத்திற்கு முறையாக வருவதில்லை. 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சப்ளை வருகின்றது.

இதனால் அந்தப் பகுதி முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், பச்சம்பாளையம் நீரேற்று பகுதியில் இருந்து நான்கு கிராமங்களுக்கும் சமமாக குடிநீர் வினியோகம் மேல்நிலைத் தொட்டி மூலம் நடைபெற வேண்டும். குளத்துப்பாளையம், தேவம்பாளையம், நல்லி கவுண்டம்பாளையம், அவிநாசிலிங்கம் பாளையம் ஆகிய கிராம பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்யவும், தெரு குழாய் வாயிலாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, இ.கம்யூ., கட்சி சார்பில் அவிநாசி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்திடம் மனு அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us