/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது பிளஸ் 2 மாணவர்கள் கருத்து
/
இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது பிளஸ் 2 மாணவர்கள் கருத்து
இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது பிளஸ் 2 மாணவர்கள் கருத்து
இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது பிளஸ் 2 மாணவர்கள் கருத்து
ADDED : மார் 14, 2026 06:22 AM

உடுமலை: பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேற்று இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வுகள் நடந்தது. இத்தேர்வுகள் குறித்த உடுமலை மாணவ, மாணவியரின் கருத்துகள்:
கவிசுகன், என்.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெதப்பம்பட்டி: இயற்பியல் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்கள் நன்கு படித்திருந்தால் மட்டுமே, பதில் அளிக்க கூடிய வகையில் இருந்தது. பிற இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்தது. தேர்வுக்கு நன்கு தயாராகி இருந்ததால், நல்ல மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
மதுஸ்ரீ, வித்யநேத்ரா மேல்நிலைப்பள்ளி,கோமங்கலம்புதுார்: இயற்பியல் தேர்வில் அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தன. மூன்று மதிப்பெண் வினாக்கள், உள்ளீட்டு வினாக்களாக இருந்தாலும், அவை எழுதும் வகையில் இருந்தன. பதட்டம் இல்லாமல், தேர்வை எளிதாக எழுதினேன்.
சுகன்யா, ஆர்.ஜி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உடுமலை: இயற்பியல் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாவும், மூன்று மதிப்பெண் வினாவும் சற்று கடினமாக இருந்தது. பிற பகுதிகள் எளிமையாக இருந்தது. பள்ளியில் திருப்புதல் தேர்வுகள் எழுதி பயிற்சி பெற்றிருந்ததால், நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சதீஷ்குமார், ஆர்.கே.ஆர்., குருவித்யா மேல்நிலைப்பள்ளி, உடுமலை: பொருளியல் தேர்வு எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது. கட்டாய வினாக்கள் மட்டும் சற்று கடினமாக இருந்தது. இருந்தபோதும், பள்ளியில் எழுதிய திருப்புதல் தேர்வுகள் நல்ல பயிற்சியாக அமைந்தது. சிறப்பான முறையில் தேர்வு எழுதியுள்ளேன்.

