sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குழாய் உடைப்பு சீரானது போக்குவரத்து எளிதானது

/

குழாய் உடைப்பு சீரானது போக்குவரத்து எளிதானது

குழாய் உடைப்பு சீரானது போக்குவரத்து எளிதானது

குழாய் உடைப்பு சீரானது போக்குவரத்து எளிதானது


ADDED : டிச 21, 2024 11:34 PM

Google News

ADDED : டிச 21, 2024 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: அவிநாசியில் இருந்து சேவூர் ரோடு திரும்பும் பகுதியில் சிக்னல் எதிரில் இரண்டாம் திட்ட குடிநீர் குழாய் உடைந்து பழுதானது. இதனால், கடந்த ஒரு மாதமாக, தண்ணீர் வெளியேறி அருகில் இருந்த சாக்கடையில் கலந்து வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே அந்தப் பகுதியில் தண்ணீர் அதிக அளவு வெளியேறி குழி ஏற்பட்டது.

டிவைடர் வைத்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமாக, போக்குவரத்து போலீசார் தடுப்பு ஏற்படுத்தியிருந்தனர். குழாய் உடைப்பு குறித்து பலமுறை குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இதனால், கோவை ரோட்டில், சிக்னல் சந்திப்பில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவந்தது.

நேற்று குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியை மேற்கொண்டனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக குழாய் பணிகள் நடைபெற்றது. இதனால், அப்பகுதியில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டதால், போக்குவரத்து சீரானது. வியாபா ரிகளும், பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us