sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இழுபறியாகும் பஸ் ஸ்டாப் மாற்றி அமைக்கும் திட்டம்

/

இழுபறியாகும் பஸ் ஸ்டாப் மாற்றி அமைக்கும் திட்டம்

இழுபறியாகும் பஸ் ஸ்டாப் மாற்றி அமைக்கும் திட்டம்

இழுபறியாகும் பஸ் ஸ்டாப் மாற்றி அமைக்கும் திட்டம்


ADDED : பிப் 19, 2025 09:28 PM

Google News

ADDED : பிப் 19, 2025 09:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை ; உடுமலை தளி ரோட்டில், பஸ் ஸ்டாப் மாற்றும் திட்டம் இழுபறியாகி வருவதால், போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.

உடுமலை தளி ரோட்டில், குட்டைத்திடல், நுாலகம், தாலுகா அலுவலகம். அரசு பள்ளி என அரசு அலுவலகங்கள் அதிகளவு உள்ளன. நுாலகம் முன், ரோட்டில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை உள்ளது.

உடுமலையிலிருந்து மூணாறு, திருமூர்த்திமலை மற்றும் பல்வேறு கிராமங்களுக்குச்செல்லும் பஸ்கள், நின்று செல்வதால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக உள்ளது.

இதனையடுத்து, பஸ் ஸ்டாப்பை, அரசு பள்ளி மற்றும் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை பகுதியில், மாற்றி அமைக்க, நகராட்சி, போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து போலீசார் பங்கேற்ற, ஆலோசனை கூட்டத்தில் இரு ஆண்டுக்கு முன் முடிவு செய்யப்பட்டது.

இருப்பினும், பஸ் ஸ்டாப் மாற்றி அமைக்கப்படாததால், இரு வழித்தடத்திலும் இயக்கப்படும் பஸ்கள் ரோட்டிலேயே நிறுத்த வேண்டியுள்ளதால், பிற வாகனங்கள் நீண்ட துாரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. எனவே, நுாலகம் முன் உள்ள பஸ் ஸ்டாப்பை, போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us