sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

4 நாளில் 18 ஆயிரம் பனை விதைகள் நடவு

/

4 நாளில் 18 ஆயிரம் பனை விதைகள் நடவு

4 நாளில் 18 ஆயிரம் பனை விதைகள் நடவு

4 நாளில் 18 ஆயிரம் பனை விதைகள் நடவு


ADDED : அக் 02, 2025 11:09 PM

Google News

ADDED : அக் 02, 2025 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருமாநல்லுார்:கிராமிய மக்கள் இயக்கம் சார்பில், மழை காலத்தை முன்னிட்டு, ஊராட்சி பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் பனை விதை நடவு செய்து வருகின்றனர்.

பெருமாநல்லுார் ரோட்டரி சங்கம் மற்றும் பொங்கு பாளையம் சக்தி விக்னேஸ்வரா பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர்களுடன் இணைந்து கடந்த நான்கு நாட்களில் தொடர்ச்சியாக 18 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தனர். மாணவர்கள் உள்பட அமைப்பினர் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தொரவலுார் ஊராட்சி பகுதியில் உள்ள நான்கு குட்டைகளில் 9 ஆயிரம் பனை விதைகள், வள்ளிபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள நான்கு குட்டைகளில் 6 ஆயிரம் பனை விதைகள், மேற்குபதி ஊராட்சி பகுதிகளில் உள்ள மூன்று குட்டைகளில் 3 ஆயிரம் பனை விதைகள் என மொத்தம் 18 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தனர்.

பள்ளி தாளாளர் மயிலாவதி, முதல்வர் சக்தி வேலுச்சாமி, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார், உதவி ஆசிரியர் பாண்டியன், கிராமிய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார், பெருமாநல்லுார் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us