/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கவிதை, கட்டுரை போட்டி; மாணவர்களே ரெடியாங்க!
/
கவிதை, கட்டுரை போட்டி; மாணவர்களே ரெடியாங்க!
ADDED : ஜன 04, 2025 12:41 AM
திருப்பூர்; தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள், திருப்பூர் எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் நடைபெற உள்ளது.
இதில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, வரும் 21ம் தேதியும்; கல்லுாரி மாணவருக்கான போட்டிகள் 22 ம் தேதியும், நடக்கிறது. பள்ளி மாணவர்கள், முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லுாரி மாணவர்கள், அந்தந்த கல்லுாரி முதல்வர்கள் வாயிலாகவும், வரும், 16ம் தேதிக்குள், நேரிலோ அல்லது ddtamil607@gail.com என்கிற இ-மெயிலுக்கு விவரங்களை அனுப்ப வேண்டும்.
ஒவ்வொரு பள்ளி, கல்லுாரியிலிருந்தும், ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் மொத்தம், 3 மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசு, 10 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசு 7 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் பரிசு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.