sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மத்திய அரசின் சாலை வரி உயர்வை கண்டித்து பொக்லைன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

/

மத்திய அரசின் சாலை வரி உயர்வை கண்டித்து பொக்லைன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

மத்திய அரசின் சாலை வரி உயர்வை கண்டித்து பொக்லைன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

மத்திய அரசின் சாலை வரி உயர்வை கண்டித்து பொக்லைன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்


ADDED : ஏப் 19, 2025 02:16 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்:திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டாரத்தில். நான்கு இடங்களில், ஜே.சி.பி., பொக்லைன் இயந்திர உரிமையாளர்கள், நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், குண்டடம், மானுார்பாளையம், சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள, 100க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திர உரிமையாளர்கள், நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பொக்லைன் இயந்திரங்கள், அதன் உதிரிபாகங்கள் விலை உயர்வு மற்றும் இன்சூரன்ஸ், சாலை வரி உயர்வு போன்ற காரணங்களால், இயந்திர வாடகை உயர்த்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதை, மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வேலை நிறுத்தம் நடைபெற்றது.

இதுகுறித்து பொக்லைன் உரிமையாளர்கள் கூறுகையில், 'கடந்த மூன்று ஆண்டுகளாக, மத்திய அரசு சாலை வரியை உயர்த்திக் கொண்டே வருகிறது.

இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பொக்லைன் இயந்திர வாடகை, முதல் ஒரு மணி நேரத்திற்கு 3,000 ரூபாயும், தொடர்ந்து வரும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும், 1,500 ரூபாயும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us