/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தற்காலிக பட்டாசு கடை போலீசார் கள ஆய்வு
/
தற்காலிக பட்டாசு கடை போலீசார் கள ஆய்வு
ADDED : அக் 14, 2025 12:19 AM
உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், தற்காலிக பட்டாசுகள் கடைகள் அமைக்க விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் மீது போலீசார் களஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையொட்டி மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்டு, 150 பேர்; மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்டு 180 பேர் என, மாவட்டத்தில், 330 பேர் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பங்கள் வரப்பெற்றன. விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதற்காக போலீசார் கள ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
கடைகள் அமைய உள்ள பகுதி பாதுகாப்பானதா, உரிய சான்றுகள் இணைக்கப்பட்டுள்ளதா, அருகே காஸ் குடோன்கள் ஏதாவது அமைந்துள்ளதா என, ஆய்வு செய்து வருகின்றனர்.
கள ஆய்வுக்கு பின், விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டு பட்டாசு கடைக்கு சில நாட்களில் அனுமதி அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.