நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம்; காங்கயம், ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ், 44; ஜே.சி.பி., டிப்பர் லாரியை சொந்தமாக வைத்து தொழில் செய்து வந்தார்.
நேற்று மதியம் வீர சோழபுரத்திலிருந்து காங்கயம் வருவதற்காக டூவீலரில் சென்று கொண்டிருந்தார். கரூர் ரோடு முத்துார் பிரிவு அருகே, பின்னால் வந்த சரக்கு லாரி, டூவீலர் மீது மோதியது.
பலத்த காயமடைந்த மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.